சாதாரணமாக பிரசவ வலியால் துடிக்கும் தாயைக் கண்டு குழந்தைகளும் அலுறுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் எட்டு வயது சிறுமி ஒருத்தி, தன் தாய் பிரசவ வலியால் துடித்திடும்பொழுது அவளுக்கு உதவி செய்து பிரசவம் பார்த்திருக்கிறாள்.
விரிவான செய்தி கீழே.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா நகரில் வசிக்கும் க்ரிஸ்டில் கர்சியா தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 2 வாரங்கள் முன்னதாகவே வீட்டில் தனியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குளியல் அறைக்குள் இருந்தபோது அவரது கருப்பையின் பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி வாட்டி, வதைக்கத் தொடங்கியது.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மகளான ஜாஸ்மின் மெக்எனானியை அழைத்த க்ரிஸ்டில் கர்சியா, ‘911’க்கு போன் செய்து, ’எனது தாய் பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்’ என்று தெரிவிக்கும்படி கூறினார்.
அந்த சிறுமியும் அவ்வாறே செய்தாள்.
அவசர உதவி வாகனம் வந்து சேர்வதற்குள் குழந்தையின் தலை வெளியே எட்டிப்பார்க்க தொடங்கி விட்டது. உடனடியாக ஜாஸ்மினை அழைத்து, குழந்தையின் தலையை பத்திரமாக பிடித்துக் கொள்ளும்படி தாய் கூற, அந்த சிறுமியும் அவ்வாறே செய்து, தனது தம்பி இந்த பூமியில் பிறக்க உறுதுணையாக இருந்தாள்.
பின்னர், அங்கு வந்து சேர்ந்த டாக்டர்கள் உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மகளின் புத்தி சாதுர்யத்தை புகழ்ந்து பாராட்டும் க்ரிஸ்டில் கர்சியா, ’ஜாஸ்மின் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசையாக இருந்தாள். நிலமையை புரிந்துக் கொண்டு, பதற்றப்படாமல் நான் சொன்னபடி கேட்டு, அவள் நிதானமாக செயல்பட்டாள்’ என்று பெருமைப்பட குறிப்பிடுகிறார்.
குழந்தைகள் நாம் பதட்டப்படுவதாலும், அழுவதாலும் மட்டும் அவர்களையும் அச்சூழல் பற்றிக்கொள்கிறது. அதையே பொறுமையாக இருந்து, அவர்களுக்கு விளக்கினால், அதைப் புரிந்துகொண்டு, அவர்களும் சாதுர்யமான செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்வர். இந்நிகழ்வின் மூலம் சிறுவர்கள் சூழலுக்கேற்ற பழகிக்கொள்வார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
தற்பொழுது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள். படத்தில் தம்பியை எடுத்துக் கொஞ்சும் 8 வயது சிறுமி.
விரிவான செய்தி கீழே.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா நகரில் வசிக்கும் க்ரிஸ்டில் கர்சியா தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 2 வாரங்கள் முன்னதாகவே வீட்டில் தனியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குளியல் அறைக்குள் இருந்தபோது அவரது கருப்பையின் பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி வாட்டி, வதைக்கத் தொடங்கியது.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மகளான ஜாஸ்மின் மெக்எனானியை அழைத்த க்ரிஸ்டில் கர்சியா, ‘911’க்கு போன் செய்து, ’எனது தாய் பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்’ என்று தெரிவிக்கும்படி கூறினார்.
அந்த சிறுமியும் அவ்வாறே செய்தாள்.
அவசர உதவி வாகனம் வந்து சேர்வதற்குள் குழந்தையின் தலை வெளியே எட்டிப்பார்க்க தொடங்கி விட்டது. உடனடியாக ஜாஸ்மினை அழைத்து, குழந்தையின் தலையை பத்திரமாக பிடித்துக் கொள்ளும்படி தாய் கூற, அந்த சிறுமியும் அவ்வாறே செய்து, தனது தம்பி இந்த பூமியில் பிறக்க உறுதுணையாக இருந்தாள்.
பின்னர், அங்கு வந்து சேர்ந்த டாக்டர்கள் உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மகளின் புத்தி சாதுர்யத்தை புகழ்ந்து பாராட்டும் க்ரிஸ்டில் கர்சியா, ’ஜாஸ்மின் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசையாக இருந்தாள். நிலமையை புரிந்துக் கொண்டு, பதற்றப்படாமல் நான் சொன்னபடி கேட்டு, அவள் நிதானமாக செயல்பட்டாள்’ என்று பெருமைப்பட குறிப்பிடுகிறார்.
குழந்தைகள் நாம் பதட்டப்படுவதாலும், அழுவதாலும் மட்டும் அவர்களையும் அச்சூழல் பற்றிக்கொள்கிறது. அதையே பொறுமையாக இருந்து, அவர்களுக்கு விளக்கினால், அதைப் புரிந்துகொண்டு, அவர்களும் சாதுர்யமான செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்வர். இந்நிகழ்வின் மூலம் சிறுவர்கள் சூழலுக்கேற்ற பழகிக்கொள்வார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
தற்பொழுது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள். படத்தில் தம்பியை எடுத்துக் கொஞ்சும் 8 வயது சிறுமி.
0 comments
Post a Comment