Simbuvai Meendum Kathalikkavillai - Nayantara Peti
சிம்புவும் நயன்தாராவும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.
பழைய கசப்புகளை மறந்து பழகுகிறார்கள்.
நடிகை திரிஷா சமீபத்தில் அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது.
பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவருக்குள் திரும்பவும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் மத்தியில் பேச்சுக்கள் கிளம்பியது.
ஏற்கனவே வல்லவன் திரைப்படத்தின் மூலம் காதல் வயப்பட்டு, மீண்டும் பிரிந்த ஜோடி என்பதால், மீண்டும் அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டதாக பலரும் நம்பத் தொடங்கிவிட்டனர்.
ஆனால் இதை மறுத்த நயன்தாரா, நடிகை திரிஷாவின் பிறந்த நாளில் சிம்புவை சந்தித்தேனே தவிர, அவரும் நானும் ஒன்றாக பிறந்தநாள் விழாவிற்கு செல்லவில்லை என்று கூறினார்.
தங்களுக்கிடைய காதல் மலரந்துள்ளதாக கூறப்படுவது, முற்றிலும் பொய்யான தகவலென்று கூறினார்.
0 comments
Post a Comment