Saturday 3 May 2014

லிங்கா படபிடிப்பில் சிக்கல்; ரஜினிகாந்த் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பூஜையுடன் தொடங்கிய லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் உள்ள அரண்மனையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அரண்மனையின் உள்ளே உள்ள சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் விரும்பினார்.

குறிப்பாக அம்பாவிலாஸ் என்ற அந்த மாளிகையில் ராஜா மற்றும் ராணி வாழ்ந்த பிரமாண்ட அறைகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
problem-in-lanka-movie-shooting
ஆனால் அரண்மனையை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்து வாரிசுகளின் தரப்பில் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

மன்னர் வாழ்ந்த அறையில் சினிமாக்காரர்களை நுழையவிட்டால், அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர்கள் கருதுவதாக தெரிகிறது.

இதனால் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எப்படியும் அனுமதி வாங்கி அரண்மனையின் உள்ளே உள்ள சில முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் கே.எஸ்.ரவிகுமார் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

அரண்மனையில் உள்ளே அனுஷ்கா ராணி போன்ற வேடத்தில் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

0 comments

Post a Comment