Friday 16 May 2014

எப்போதும் கூப்பிட்டாலும் நான் வரத் தயார்! - லட்சுமிமேனன்

ஒரு பெரிய பூகம்பமே வந்து போனமாதிரி இருக்கிறது விஷாலுடன் நடித்த முத்தக்காட்சி.

இதுபற்றி பலதரப்பட்டவர்களும் லட்சுமி மேன்னை விமர்சித்ததை தொடர்ந்து, இனி முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என முடிவு செய்திருந்தார்.

ஆனால் ஒவ்வொரு படத்திற்கும், தனக்கு பிடித்தமான டைரக்டருக்கு மட்டும் கால்ஷீட் கொடுக்க தயாராக இருக்கிறார்.

அந்த டைரக்டர் எஸ்.ஆர். பிரபாகரன்.

கும்கி படத்தில் அறிமுகமாகி பிரபல்யம் அடைந்தாலும், அதைத்தொடரந்து சுந்தரபாண்டியன் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அந்த இமேஜை தக்க வைத்துக்கொள்ள உதவியர் இவர்தான்.

அதனால்தான் இந்த டைரக்டரின் மீது ஒரு அலாதி மதிப்பு வைத்திருக்கிறார் லட்சுமி மேனன்.
neenga-kupittal-nan-vara-thayar-lakshmimenon
தற்பொழுது பிரபாகரன் டைரக்ட் செய்யும் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் கதிர்வேலன் காதல் படத்தில் லட்சுமி மேன்னை கதாநாயகியாக்க பிரம்ம பிரயத்தனம் செய்தார் டைரக்டர்.

ஆனால் அந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

எப்படியும் மீண்டும் லட்சும்மிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் அதிக ஈடுபாட்டுடன் டைரக்டர் இருப்பதாக கேள்வி.

அடுத்த உதயநிதியின் படத்திலாவது தனக்கு பிடித்த நடிகையை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பிரபாகரன்.

இப்படி தன் மீது அக்கறை கொண்ட டைரக்டருக்கு முன்னுரிமை தராமல் இருக்க முடியுமா என்ன? அதுதான் லட்சுமி மேனன் அந்த ஒருவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறார்.

எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க கூப்பிட்டால் நான் வர தயார் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

0 comments

Post a Comment