Monday 19 May 2014

மோடிக்கு மிக பிரமாண்ட விழா!

மோடிக்கு மிக பிரமாண்ட விழா

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான 16-ம் தேதியில் இருந்தே டெல்லியில் வசிக்கும் குஜராத்தியரின் வீடுகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது என்றே கூறலாம்.

இதன் உச்சகட்டமாக டெல்லியில் வசிக்கும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட குஜராத்தியர்கள் இணைந்து மோடிக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பாராட்டு விழா திட்டம் தொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரது பதிலுக்காக காத்திருப்பதாகவும் டெல்லி குஜராத்தி சமாஜ் தலைவர் மோகித் பாரிக் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் மோடி செய்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட மோகித், நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் திறன் மோடியிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

0 comments

Post a Comment