Monday 19 May 2014

மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத காங்கிரஸ் தலைவர்கள்

இந்தியாவின் பிரதமராகப் போகும் நரேந்திர மோடிக்கு, உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், உள்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது ஆச்சர்யமளிக்கிறது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 330-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

வருகிற 21-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு அமெரிக்க தலைவர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் இந்தியாவின் அடிப்படை கலாச்சாரத்தை பின்பற்றி ஒரு வாழ்த்துக்கூட சொல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று வெங்கையா நாயுடு கூறினார்.

0 comments

Post a Comment