Friday 16 May 2014

சுனாமியாய் தாக்கிய மோடி : 21ம் தேதி பிரதமராகிறார்

இந்த முறை அரசியல் கணிப்புகள் அனைத்ததும் உண்மையாகிவிட்டன. மோடி அலை வீசுகிறது என்று சொன்ன ஊடகங்கள் இப்பொழுது "மோடி சுனாமி" என அழைக்கின்றனர்.

தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அபார வெற்றிப்பெற்ற மோடி, வரும் 21ம் தேதி பிரதமர் பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகள் அ.இ.அ.தி.மு.க வெற்றிப்பெறும் சூழ்நிலையில் உள்ளது. இரண்டு கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழகத்தில் தி.மு.க உட்பட மற்ற கட்சிகள் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெற தேவையான எண்ணிக்கையிலாம ஓட்டினைப் பெறவில்லை.

மோடி கட்சியின் அமோக வெற்றி ஒரு பெரும் வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர்.

குஜராத் மாநில முதல்வராக, அவர் பதவியேற்றபின், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். பல சீன நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்து, அம்மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மோடி தலைமையில் அரசு அமைந்தால், சீனா இந்தியா இடையேயான நட்பு, மேலும் பலமடையும். குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில், மோடியை மறைமுகமாக தொடர்புபடுத்தி, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், பொருளாதார தடையை திணித்ததால், தற்போது அவர் பிரதமர் ஆவதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து மோடி பேசியதாக வெளியான தகவல்கள், இரு நாட்டு நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்தில், மேற்கத்திய ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டவை.இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க உட்பட உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள் மோடி வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

Tags: மோடி, பாஜக, இந்தியா, ஓட்டு எண்ணிக்கை

0 comments

Post a Comment