Sunday 18 May 2014

ரஜினியுடன் பல்லேலக்கா ஆடப்போகும் நயன்தாரா

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்று சொல்வார்கள். சினிமாவிலும் அப்படிதான் சான்ஸ் கிடைக்கும்போதே நடித்துக்கொள் என்பது சினிமா மொழி. அதுவும் இளமை உள்ளபோதே கிளாமராகவும், செக்சியாகவும் நடித்து நாலு பணம் சம்பாதித்து கல்லாக் கட்டிக்கொள்வது புத்திசாலித்தனம்.

அதைவிட்டு, நான் இப்படிதான்நடிப்பேன், அப்படிதான் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லி, கட்டுப்பாடு விதித்தால் சினி பீல்டிலிருந்தே அந்த நடிகை வெகு விரைவில் தூக்கி எறியப்பட்டுவிடுவாள்.

இந்த எழுதப்படாத விதிகளையெல்லாம் நன்கு உணர்ந்தவர் நயன்தாரா. தான் அறிமுகமானதே ரஜினி படத்தில்தான்.

ரஜினிக்கும், நயனுக்கும் ஒரு ராசி இருக்கும்போல. ரஜிகாந்துடன் நடித்த முதல் படத்திலேயே நல்ல பெயர் வாங்கிய நயன், அதன் பிறகு இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து ஒரு வெற்றி நடிகை என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நயன், ரஜினியின் புதிய படமாக லிங்காவில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிப்பாட சம்மத்திருக்கிறாராம்.


கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் லிங்கா படத்தில், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களும் நடிக்கிறாள். ரஜினிகாந்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.
meendum-rajiniyudan-pallelakka-aadum-nayantara

தொடர் காதல் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நயன்தாரா, தனது ரீ-எண்ட்ரிக்குப் பின் எந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

அவர் நாயகியாக நடித்த ராஜாராணி, ஆரம்பம், நீ எங்கே என் அன்பே போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடி அவரது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு', உதயநிதி கோடியாக ‘நண்பேண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரஜினியின் லிங்கா படத்திற்காக மட்டும் தனது கொள்கைகளை சற்று விலக்கி வைத்துள்ளாராம் நயன்.

ஏற்கனவே, ரஜினியுடன் ‘சந்திரமுகி' படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவாஜி' படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர், ரஜினி நடிகராக நடித்த ‘குசேலன்' படத்தில் நடிகையாக நடித்திருந்தார்.

இந்நிலையில், லிங்கா படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு நயன்தாரா நடனமாடினால் நன்றாக இருக்கும் என அவர் முன் கோரிக்கை வைக்கப் பட்டதாம். ரஜினி படம் என்பதால் நயன் உடனடியாக ஓகே சொல்லி விட்டதாகக் கூறப்படுகிறது.

தலைவரின் காந்த புயல் கோரிக்கைக்கு தலைசாய்க்காமல் இருக்க முடியுமா என்ன? அதுதான் நயன் சொன்னவுடனேயே பாடலுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் போல.

0 comments

Post a Comment