Wednesday 7 May 2014

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல். முன்பதிவு இரத்து

நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தின் முன் பதிவுகள் திடீரென நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

உலக ரஜினி ரசிகர்கள் கோச்சடையான் படத்தை எதிர்நோக்கியிருக்கும் இச்சயமத்தில் இந்த தகவல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை மற்றும் அனைத்து தியேட்டர்களில் முன்பதிவுகள் நிறுத்ததிற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், சினிமா விநியோகிஸ்தர்கள் கேட்ட மிகப்பெரிய தொகையை தியேட்டர் அதிபர்கள் கொடுக்க முன்வரவில்லை என்ற செய்தி நிலவுகிறது.


இந்த தகவல் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து தியேட்டர் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், நாளைக்குள் சமாதானமிகா கோச்சடையான படம் குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் என கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படங்கள், மே 9 ரிலீஸ் ஆகிறது.

இறுதியாக கிடைத்த தகவல்கள் படி, கோச்சடையான் படம் மே 23ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

0 comments

Post a Comment