Wednesday 7 May 2014

மூன்றாவது காதலும் தோல்வி...சோகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா!

சிம்புவுடனான முதல் காதல் நல்ல வேகம் காட்டியது. இருவரும் உதடு கவ்வி உறிஞ்சியபடி போஸ் கொடுத்தனர் ஒரு படத்திற்கு.

சிட்டுக்களாக சிறகடித்துப் பறந்தனர். ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆக நினைத்தனர்.

யார் கண் பட்டதோ, காதல் சிறகுகளை படக் படக்கென முறித்துப் போட்டனர்.

இனி காதல் என்பதே இல்லை... என்று ஆளாளுக்கு "டூ...கா.." விட்டுக்கொண்டனர்.


வேதனையில் விளிம்பில் இருந்தபோதுதான், பிரபு தேவாவுடன் பழக்கம் காதலாக மாறியது.

திருமணமானவர் என்று  கூட பார்க்காமல் காதல் லீலைகள் புரிந்தனர். வெளிநாட்டுப் பயணத்திலேயே காதல் செய்து வந்தனர்.

காசுப் பணமும் கரைந்த்து.. சம்பாதித்த பணத்தையெல்லாம் காதலுக்காக செலவிட்ட நயன்தாராவுக்கு மீண்டும் காதல் தோல்வி...

கவலைக்கு மறந்தளித்த பிரபு தேவா பின் தங்கிவிட்டார்...

மனமுடைந்த நயன், இனிமேல் யாரையும் காதலிக்கவே கூடாது என்று உறுதியாக இருந்தார்.

இதனால் இமயமலைக்கெல்லாம் சென்று வந்தார். ருத்ராட்ச மாலை அணிந்து பக்தி பழமாக காட்சியளித்தார்...

இந்த காதல்களுக்கு முன்பேயே அவருக்கு ஒரு காதல் இருந்த்து.. அந்த காதல் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருந்த்து...

அதுதான் அவர் விரும்பிய இறால் குழம்பு.... இறால் என்றால் நயனுக்கு உயிர்..

இப்பொழுது அதற்கும் உலை வைத்துவிட்டனர் டாக்டர்கள். சமீப காலமா தன்னுடைய பளபள சருமத்தில் ஏற்பட்ட மாற்றத்தை டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார் நயன்..

இறால் சாப்பிடுவதுதான் சரும மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லி அதை உடனே நிறுத்தும்படி டாக்டர்கள் கட்டளையிட்டுவிட்டார்கள்...

பாவம் நயன்.. இப்பொழுது அந்த நீண்டகால காதலும் தோல்வியடைந்துவிட்டதால், ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்...


0 comments

Post a Comment