அழகிரிக்கு ஆதரவான தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க.வின் படுதோல்வியை லட்டு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தனது தானைத் தலைவனை கட்சியிலிருந்து நீக்கியதால்தான் தி.மு.க. படுதோல்விக்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், திமுக படுதோல்வி அடைந்துள்ளதால், மதுரையில் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டின் முன் எல்.சி.டி டிவி பெரிய திரையில் வைக்கப்பட்டிருந்தது.
அழகிரி ஆதரவாளர்கள் காலையில் வீட்டின் முன் குவிந்தனர். அவர்கள் திமுகவின் தோல்வி குறித்த செய்தியைக் கேட்டு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
அழகிரியைப் புறக்கணித்ததால் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எப்படி இருந்தாலும், தோல்வியை ஏற்கனவே எதிர்நோக்கியிருந்ததால் தி.மு.க.வினர் அதிகம் வருத்தபடவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
ஆட்சியில் இருக்கும்போது, சரியானபடி நிர்வாகம் செய்து இருந்தால் தி.மு.க.விற்கோ, காங்கிரசிற்கோ இதுபோன்ற மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது.
தனது தானைத் தலைவனை கட்சியிலிருந்து நீக்கியதால்தான் தி.மு.க. படுதோல்விக்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், திமுக படுதோல்வி அடைந்துள்ளதால், மதுரையில் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டின் முன் எல்.சி.டி டிவி பெரிய திரையில் வைக்கப்பட்டிருந்தது.
அழகிரி ஆதரவாளர்கள் காலையில் வீட்டின் முன் குவிந்தனர். அவர்கள் திமுகவின் தோல்வி குறித்த செய்தியைக் கேட்டு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
அழகிரியைப் புறக்கணித்ததால் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எப்படி இருந்தாலும், தோல்வியை ஏற்கனவே எதிர்நோக்கியிருந்ததால் தி.மு.க.வினர் அதிகம் வருத்தபடவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
ஆட்சியில் இருக்கும்போது, சரியானபடி நிர்வாகம் செய்து இருந்தால் தி.மு.க.விற்கோ, காங்கிரசிற்கோ இதுபோன்ற மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது.
0 comments
Post a Comment