Thursday 15 May 2014

அறுதிப் பெரும்பான்மை பெற்றி ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

bjb vetri

இந்தியாவில் நடந்த தேர்தல் முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் பாரதீய ஜனதா கூட்டணி 320 இடங்களில் முன்னணி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெற்றியை கொண்டாட இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளால் மும்பை பங்கு சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளது.

ஆட்சி மாற்றத்தால் பங்கு சந்தையின் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று நினைத்து வெளிநாட்டினர் முதலீடு செய்வதால் பங்கு சந்தை களை கட்டியிருக்கிறது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிதான் இந்தியாவில் அமையும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முடிவு ஆகி உள்ளது.

மக்களின் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து நல்லாட்சி கொடுக்க ஆட்சி அமைக்கவிருக்கும் திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்...




0 comments

Post a Comment