Saturday 3 May 2014

சோமாலியா நாட்டில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 6

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருபத்தைந்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
somaliyavil-gundu-vedippu-pali-6
சோமாலியாவின் தலைநகரின் மையப்பகுதியில் 'கிலோமீட்டர் 4' ஜங்சனில் சாலையோரத்தில் இருந்த பழைய உருக்குலைந்த காரில் குண்டு வைக்கப்பட்டுள்ளது.

பேப்பர் பேக்கில் வெடிகுண்டை மறைத்து வைத்து, Remote Control மூலம் இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.



இதில் பனாதிர் பகுதியின் முக்கிய அதிகாரி ஒருவரும் பலியானார். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும், சோமாலியா மக்களின் விடுதலைக்காக மொகதிசு நகர அதிகாரியையும், அவரது 7 பாதுகாவலர்களையும் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

0 comments

Post a Comment