Thursday 17 April 2014

கருணாநிதி காலத்துக்கு தகுந்த மாதிரி பேசுபவர் : முரளிதரராவ் தாக்கு

தி.மு.க. தலைவர் திரு கருணாநிதி காலத்திற்கு தகுந்தவாறு பேசி வருகிறார் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளி தரராவ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது,

ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் வெளியேற்றுவதுதான் எங்கள் ஒரே நோக்கம். இந்திய முழுவதும் மோடி அலை வீசுகிறது.


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் களத்தில் இல்லை.திமுக தலைவர் கருணாநிதி முதலில் மோடியை நண்பர் என்றார். அதன் பிறகு காலத்துக்கு ஏற்றவாறு பேசி வருகிறார்.

ப.சிதம்பரம் பேட்டி கொடுப்பதில் மட்டும் வல்லவர். அவர் தைரியம் இருந்து இருந்தால் தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே என்று சவால் விடுக்கும் வகையில் பேசினார். 

0 comments

Post a Comment