Thursday 17 April 2014

ஹன்சிகாவின் கையைப் பிடித்து இழுத்த ரசிகர்; படபிடிப்பு ரத்து

நடிகை ஜெயப்பிரதா மகன் சித்தார்த் நடிக்கும் படம் உயிரே.. உயிரே..

இந்த படத்தில் வரும் பாடல் காட்சிக்காக கோவாவில் நேற்று மாலை 4 மணிக்கு படப்பிடிப்புத் தொடங்கியது.

கடற்கரையில் படப்பிடிப்பு நடந்ததால் அங்கு ஏராளமான ஹன்சிகாவின் ரசிகர்கள் திரண்டனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் ஹன்சிகா ஹன்சிகா என கோஷம் போட்டனர்.

ஆர்வக் கோளாறில் ஹன்சிகாவிடம் ஆட்டோகிராப் கேட்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் அதிக கூட்டம் அங்கு கூடியது.

அங்கிருந்த ஒரு சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையைப் பிடித்து இழுத்தனர். தொட்டுப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.



அங்கு ஏற்பட்ட பரப்பு சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்று உணர்ந்த செக்யூரிட்டிகள், கடைசியில் கூட்டத்தை சமாளிக்க முடியாத்தால், ஹன்சிகாவை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, நான் தென்னிந்தியாவில் நடித்துக்கொண்டிருப்பதால் என்னை யாருக்கும் அதிகம் தெரியாது என்று நினைத்திருந்தேன்.

ஆனால் குழந்தை நட்சத்திரமாக பார்த்த இவர்கள் என்னை நன்றாக அடையாளம் கண்டுகொண்டுவிட்டனர்.

என் மீது இருக்கும் அன்பினால் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிவிட்டது. அதனால் வேறு வழியில்லாமல் பாதுகாப்பு கருதி, அங்கு படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டியதாகிவிட்டது என்றார்.

பிறகு அங்கிருந்து வெளியேறி படப்பிடிப்பு குழுவினர், அதிகம் கூட்டம் இல்லாத கடற்கரைப் பகுதிச்சென்று மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர்.

0 comments

Post a Comment