Tuesday 15 April 2014

ஹிலாரி கிளிண்டன் மீது செருப்பு வீசிய பெண் கைது

அமெரிக்கவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்னின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மீது செருப்பை செருப்பை வீசிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்டுள்ள கட்டடத்தில் அத்து மீறி நுழைதல், ஒரு நப்பருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆலிசன் மிச்சல் எர்னஸ்ட் என்ற பெண் ஹிலாரியின் மீது ஷூவை வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அப்பெண்ணிற்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments

Post a Comment