Tuesday 22 April 2014

காதலியை குத்தி கொன்ற சாப்ட்வேர் இன்ஜினியர்; தானும் தற்கொலை முயற்சி

பெருங்குடி ரயில் நிலையம் அருகே  தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பொறியாளர் வைஷியா, அவருடன் பணியாற்றி வந்த வெங்கடாஜலபதி என்பவரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

பிறகு வெங்கடாஜலபதி தன்னைத் தானே குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வைஷியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடாஜலபதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

menporul-poriyalar-kuthi-kolai-kathalan-tharkolai-muyarchi

மன்னார்குடியைச்சேர்ந்தவர் வைஷியா (25) தந்தை பெயர் ஞானசேகரன். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் (டிசிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்தார். இதே நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிபவர் வெங்கடாஜலபதி (29).

திருப்பூரைச் சேர்ந்தவர். நேற்று இரவு வேலை முடிந்து வைஷியா பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள ஷேஷாத்திரிபுரத்தில் சென்று கொண்டிருந்தார்.


வைஷியாவை தொடர்ந்து வந்த வெங்கடாஜலபதி அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், மறைத்து வைத்திருந்த கத்தியால் வைஷியாவை குத்தினார் வெங்கடாஜலபதி. பிறகு வெங்கடாஜலபதி தன்னைத்தானே குத்திக்கொண்டார்.

தகவல் அறிந்து வேளச்சேரி போலீசார் விரைந்து வந்து இரண்டு பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலன்அளிக்கால் வைஷியா இறந்து போனார்.

ஆபத்தான நிலையில் வெங்கடாஜலபதி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேரும் காதலித்து வந்துள்ளளனர். திடீரென அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கொலை நடந்ததாக வேளச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments

Post a Comment