Tuesday 22 April 2014

அடுத்தவன் மனைவியை தன்னுடைய மனைவி என்று வாதிடும் காமுகன்.

கிராமத்தில் ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பொருளை களவாடி வைத்துக்கொண்டு, அது தன்னுடையதுதான் என்று வாதிடுவார்கள். பொருளை இழந்தவர்களும் அடையாளம் ஏதும் இல்லாது இருப்பதால், வேறு வழியில்லாமல் அதை அவர்களுக்கு விட்டுவிடுவார்கள்.

இந்த சம்பவமும் அதுமாதிரிதான்.

துரைச்சேரியை சேர்ந்தவன் மாதப்பன்.

நிரந்தர வேலை இல்லாத இவனுக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் சூசகா பாளையம்.
aduthavan-manaiviyai-than-manaivi-endru-koorum-kamugan

அங்கங்கே கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் வயிற்றை நிரப்பும் இவன், வேலைக்கு செல்லும் இடத்தில், நல்ல அழகான பெண்களைக் கண்டால், அவர்களிடம் பேச்சு கொடுத்து தன்னுடைய இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் பழக்கம் உடையவன்.

சென்னை அருகே உள்ள ஒரு ஜல்லி உடைக்கும் கிரசரில் கடந்த மாதம் வேலைக்குச்சேர்ந்த மாதப்பன், அங்கு வேலை செய்யும். ஜ்ஜூகாமன் மனைவி ராசாத்தியை களவாடிவிட்டான்.

அவர்கள் இவரும் பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு சென்று ஜாலியாத ஊர் சுற்றிக்கொண்டே, அங்கு கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வந்தனர்.

ஆறுமாதங்களித்து, ஜ்ஜூகாமனுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்ததால், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்றார்.

அங்கு இருக்கும் பெரியவர்களிடம், இவன் என்னுடைய மனைவியை கடத்திக்கொண்டு வந்துவிட்டான். நீங்கள்தான் இவனிடமிருந்து என் மனைவியை பிரித்து என்னுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

பஞ்சாயத்து நடந்தபோது, இவள் என்னுடைய மனைவிதான் என்று மாதப்பன் சத்தியம் செய்தான்.

அது மட்டுமில்லாமல் அவனுடைய மனைவி பெயர் ராசாத்தி என்று சொல்கிறான்.. ஆனால் என்னுடைய மனைவி பெயரோ ராஜாத்தி... வித்தியாசம் இருக்கிறது இல்லையா? அதுதான் ஒரே நம்பிக்கை.. ராஜாத்திதான் என்னோட மனைவி என்று மாதப்பன் வாதிட்டான்.

இதைக் கேட்ட ஜ்ஜூகாமன் கூப்பிடுவது தான் ராஜாத்தி.. ஆனால் அவளுடைய உண்மையான பெயர் ராசாத்திதான் என்று சொன்னான்.

இதைக் கேட்ட பஞ்சாயத்தார், ஜ்ஜூகாமன் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் சொல்லியதால் அவனுடைய மனைவி ராசாத்தி இல்லை என்று தீர்ப்பு சொல்லிவிட்டனர்.

இதனால் மனமுடைய ஜ்ஜூகாமன் அங்கிருக்கும் போலிசாரிடம் முறையிட சென்றார்..

பதினைந்து வருடமாக தன்னிடம் வாழ்ந்த மனைவியை ஒரு எழுத்து வித்தியாசப்படுவதால் மாதப்பனின் மனைவி என்று கூறிய மாதப்பனை விரைவில் போலிசார் கைது செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


0 comments

Post a Comment