சிம்பு-ஹன்சிகா ஜோடியாக இணைந்து நடிக்கும் படம் வாலு.
இப்படத்தில் கமிட்டான இருவரும் காதல் வயப்பட்டனர். நயனுடனான காதல் பிரிவில் இருந்த சிம்புவிற்கு ஹின்சிகாவின் ஆறுதல் காதலாக மாறியது.
இருவரும் காதலை வெளிப்படையாக தெரிவித்தனர்.
படம் எடுத்து முடிவதற்குள் கருத்து வேறுபாடு காரணமாக காதல் முறிந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதற்கிடையில் படம் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட வேண்டிய நிலையில், அதில் ஹன்சிகா நடிக்க மறுப்பதாக கூறுப்படுகிறது.
இதானல் பாதிக்கப்பட்ட வாலு படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட் சக்ரவர்த்தி, தயாரிப்பாளர்சங்கத்தில் ஹன்சிகாவின் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் வாலு படத்தில் நடிக்க வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு ரூ. 70 லட்சம் சம்பளம் பேசப்பட்டது என்றும் அதில் 55 லட்சத்தை கொடுத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ. 15 லட்சத்தை தந்து விடுவதாக கூறினேன். ஆனால் ஹன்சிகா கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.
இதனால் நான் குறிப்பிட்ட நாளில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறித்த நாளில் படம் வெளியாகவில்லை என்றால் நான் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டி வரும் என்று அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
புகார் குறித்து ஹன்சிகா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடத்தில் 9 முறை தான் கால்சீட் கொடுத்ததாகவும், அதை அவர்கள் பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டார்கள் என்றும், தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார் ஹன்சிகா.
0 comments
Post a Comment