Tuesday 6 March 2012

மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்

மலையாள பட அதிபர் ஒருவர் மீது நடிகை ஸ்ரேயா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். பட அதிபர் மீது வழக்கு தொடரவும் ஸ்ரேயா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா ஆகியோர் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த மலையாள படம் "போக்கிரி ராஜா" ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கதைப்படி, மம்முட்டியும், பிருதிவிராஜூம் அண்ணன்-தம்பி. பிருதிவிராஜூம்,ஸ்ரேயாவும் காதலர்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க மம்முட்டி நடத்தும் போராட்டம்தான் கதை.

actress shreya photos




"போக்கிரிராஜா" படத்தை தயாரித்தவர் தாமஸ்ஆண்டனி. இவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை ஸ்ரேயா புகார் செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது

"போக்கிரிராஜா" மலையாளப் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளும்போது, இந்தப படத்தை வேறுமொழிகளில் மொழிமாற்றம் செய்து விளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் நடிக்க சம்மதித்தேன். அதற்கான ஒப்பந்ததில் நானும ்பட அதிபர் தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டு இருக்கிறோம்.


அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆண்டனி மீறி விட்டார். இது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் சய்து இருக்கிறேன். "போக்கிரி ராஜா" படத்தை தமிழ் உள்பட வேறு எந்த மொழிகளிலும் 'டப்' செய்து வெளியிடக்கூடாது தடை செய்ய வேண்டும் என கோரி கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறப்பதாக ஸ்ரேயா கூறியுள்ளார்.



0 comments

Post a Comment