Thursday 15 May 2014

ஓட்டு எண்ணிக்கை; த்ரில்லிங் முடிவுகள்! திக் திக் ..பக்...பக்..!

உலகெங்கும் பெரியதாக எதிர்பார்த்து காத்திருக்கும், இந்திய அரசு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்கவுள்ளது.

எப்படியும் தங்களது கூட்டணி வெற்றிப்பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு இனிப்புகளை வாங்கி குவித்துள்ளது.

வெற்றிப்பெறும் கட்சிக்கார்களுக்காக, வெற்றியைக் கொண்டாடுவதற்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிவின்போதும் எகிறும் த்ரில்லுக்கு அளவே இருக்காது.

திடீரென பின்தங்கியிருந்த வேட்பாளர், முன்னணியில் என்ற செய்தி கூட வரலாம்.

எந்த நேரத்தில் என்ன நிகழும் என்று கணிக்க முடியாத நிலையில்தான் தேர்தல் எண்ணிக்கை முடிவு இருக்கும்.

இதுபோன்ற திரில்லிங்கை அனுபவிக்கவும், மனதில் ஒரு தைரியம் இருக்க வேண்டும்.

இந்த த்ரில்லாங்கான அனுபவத்தை நீங்களும் அனுபவித்து மகிழ இன்று உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

கட்சி சார்புடைய டி.விக்களில் தேர்தல் முடிவுகளை பார்ப்பது அறிவது வீணான செயல். ஏன் என்றால் அவர்கள் அவர்களது கட்சி சார்புடைய வேட்பாளர்களையே கடைசி வரைக்கும் முன்னணியில் இருப்பதாக காட்டுவர்.

அதனால் பொது சார்புடைய, கட்சி சார்பற்ற தொலைக்காட்சிகளில் தேர்தல்முடிவுகளை பார்த்து தெளிவது நல்லது.

எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், முன்னைய ஆட்சியில் உள்ள குறைபாடுகளை கலைந்தும், புதிய ஆட்சியில் மக்களுக்கு நன்மை செய்யும் புதுமையை புகுத்தியும், மக்கள் நலன் பணியில் ஈடுபட வேண்டும்.

இல்லையெனில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறும் கொடுமையை யாராலும் மாற்றவியலாது.

ஓட்டு எண்ணிக்கை; த்ரில்லிங் முடிவுகள் இன்னும் சில நிமிடங்களில்..!

0 comments

Post a Comment