Sunday 11 May 2014

விலங்குதனமாக யாரும் யாருடன் உறவு கொள்ளலாமா? நாடு தாங்குமா?

விலங்குதனமாக யார் வேண்டுமானாலும், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாமா? நாடு தாங்குமா? இதோ பாருங்க.. அதுபோன்ற சம்பவம்தான் தமிழ்நாட்டில் நடந்து, இப்போ செய்தியாகியிருக்கு.

வீட்டில் சண்டைப் போட்டுக்கொண்டு சென்ற நபர் ஒருவர், மனைவியை விட்டுவிட்டு 20 நாட்கள் தலைமறைவாகினார்.

பின்னர் வீட்டுக்கு வந்த அவர், அவருடைய மனைவியிடம், தான் தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
yarum-yarudanum-uravu-kollalama


இதனால் பயந்துபோன அப்பெண்மணி அருகில் உள்ள காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார்.

கணவரை விசாரித்த போலிசார் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர்.


மேலும் கொலைமிரட்டல் வழக்கும் பதிவு செய்தனர்.

மனைவியுடன் சண்டைப்போட்டுக்கொண்டு வெளியேறுபவர்களெல்லாம் இரண்டாவது திருமணம்செய்துகொண்டால் நாடு தாங்குமா?

சண்டை என்றால் அன்றே சமாதானம் ஆகிவிட வேண்டும். இது சாதாரண ஒரு நிகழ்வாக இருக்க வேண்டுமே தவிர, இதையே ஒரு காரணம் காட்டி, வேறு திருமணம் செய்கிறார் என்றால், இதற்கு முன்பே அங்கே ஒரு அச்சாரம் போட்டுவிட்டுதான், அதற்காகவே சண்டை போட்டிருப்பார் போல இருக்கிறது.

இதுபோன்றவர்களை நைய புடைக்க வேண்டும். ஒருவருனுக்கு ஒருத்தி என்ற இந்து மத கலாச்சாரத்திற்குட்பட்டு வாழ்ப்பவர்களை மட்டுமே நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விலங்குதனமாக யார் வேண்டுமானாலும், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம். யாருடனும் வசிக்கலாம் என்ற கட்டுப்பாடற்ற நிலையில் வாழ்பவர்களை கைது செய்து, அதற்கான சரியான தண்டையை வழங்க வேண்டும். அப்போதுதான் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள்.

எதிர்கால சந்ததிகளும், அதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருப்பார்கள்.

அரசு இதற்கென தனி சட்டமியற்றி, அதைச்செயல்படுத்த வேண்டும்.

இருபாலருக்கும் இது பொருந்தும். மேல்நாட்டு கலாசாரத்தைப் பேசுபவர்களை நாடு கடத்த வேண்டும். இங்கு என்ன உள்ளதோ, அதே ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதுதான் நல்லது.



0 comments

Post a Comment