Monday 19 May 2014

தமிழ்நாட்டின் அடுத்த தலைவர்கள் ரெடி; மோடி தீர்மானம்

பிரதமராக பதவியேற்க விருக்கும் மோடி, தேர்தலுக்கு முன்பு தான் சந்தித்த முக்கியமான பிரமுகர்களை பதவியேற்பு விழாவிற்கு அழைத்துள்ளார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் முக்கியமான முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை மறக்காமல் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு பிரதமர் பதவியேற்கும் விழாவில் தமிழ்நாட்டில் அழைக்கப்படும் நடிகர்கள் இவர்களாகத்தான் இருக்கும்.

தமிழகம் மட்டுமல்லாமல், உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வருங்கால பிரதமர் அவர்கள் அழைப்பு விடுத்ததன் மூலம் தமிழக மக்களையும் பிரதமர் மோடி அவர்கள் கவருவார் என்பதில் சந்தேகமில்லை.

ரஜினி லிங்கா திரைப்படத்திலும், விஜய் கத்திப் படத்திலும் பரபரப்பாக நடித்துக்கொண்டிருப்பதால், பிரதமர் பதவி ஏற்கும் விழாவிற்கு செல்வார்களா என்பதை பொருந்திருந்து பார்க்க வேண்டும்.
tamilnattin-audutha-thalaivargal-ready

இவர்களிருவரும் பதிவியேற்கும் விழாவிற்குசெல்லும் நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மீதான தமிழக மக்களின் பார்வையும், மதிப்பும் அதிகரிக்கும் என்பது அப்பட்டமான உண்மை.

இவர்களின் மூலம் தமிழக மக்களை கவர்வதோடு, தமிழ்நாட்டில் புதிய அரசியல் தலைவர்களை உருவாக்கவும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


0 comments

Post a Comment