எந்த வேடத்திலும் நடிக்க தயார் என்று பிரபலமான தமிழ் நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
தற்பொழுது நயன்தாரா சிம்புவுடன் இது நம்ம ஆளு திரைப்படத்திலும், உதயநிதி ஸ்டாலினுடன் நண்பேன்டா படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சூர்யாவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கும் படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
நயன்தாரா அளித்த பேட்டியில், "எனக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்ற படங்களில் நடிப்பது மிக கடினம் என்றும், கதாநாயகியைச் சுற்றியே கதை நகர்வதால் அதற்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியில் வந்த கஹானி படத்தை பார்த்த போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் ரீமேக்கில் மட்டும் நடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டேன்.
இதில் நான் வித்யாபாலன், போல் கர்ப்பிணியாக நடிக்க வில்லை. டைரக்டர்தான் என் கேரக்டரை மாற்றினார்.ஏற்கனவே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் கர்ப்பிணியாகவும் இரு குழந்தைகளின் தாயாகவும் நடித்து இருக்கிறேன்.
என்னை பொருத்தவரை எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் கமர்சியல் படங்களின் கதாநாயகி. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
தற்பொழுது நயன்தாரா சிம்புவுடன் இது நம்ம ஆளு திரைப்படத்திலும், உதயநிதி ஸ்டாலினுடன் நண்பேன்டா படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சூர்யாவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கும் படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
நயன்தாரா அளித்த பேட்டியில், "எனக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்ற படங்களில் நடிப்பது மிக கடினம் என்றும், கதாநாயகியைச் சுற்றியே கதை நகர்வதால் அதற்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியில் வந்த கஹானி படத்தை பார்த்த போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் ரீமேக்கில் மட்டும் நடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டேன்.
இதில் நான் வித்யாபாலன், போல் கர்ப்பிணியாக நடிக்க வில்லை. டைரக்டர்தான் என் கேரக்டரை மாற்றினார்.ஏற்கனவே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் கர்ப்பிணியாகவும் இரு குழந்தைகளின் தாயாகவும் நடித்து இருக்கிறேன்.
என்னை பொருத்தவரை எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் கமர்சியல் படங்களின் கதாநாயகி. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
0 comments
Post a Comment