Monday 21 April 2014

சிம்ரனை பாட வைத்த பார்த்திபன்

பார்த்திபன் படங்கள் வித்தியாசமாக இருக்கும். அவருக்கென்று ஒரு தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு தமிழி சினிமா உலகில் பிரபலமானவர்.

ஒரு டைரக்டராக பரமளித்த அவர், ஒரு நடிகராகவும் சிறந்து விளங்குகிறார்.

புதிய பாதை படத்தின் நடிகராகவும், கதை, வசனம், டைரக்ஷன், என அனைத்து துறையிலும் கலக்கியவர் நடிகர் பார்த்திபன்.

தற்பொழுது தான் எடுக்கும் புதிய படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் என பெயர் வைத்துள்ளார்.

nadigai-simrani-pada-vaitha-parthipan

வித்தியான பாத்திரப்படைப்பு, கதையம்சங்களைத் தேர்ந்தெடுத்து டைரக்ட் செய்யும் பார்த்திபம் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை தொடங்கியுள்ளார்.

புது முகங்களை வைத்து இப்படத்தை இயக்கும் டைரக்டர் பார்த்திபன், பிரபலமான நடிகர் நடிகைகளையும், கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில் நடிகை சிம்ரனையும் இப்படத்தில் பாட வைத்துள்ளார்.

நடிகை சிம்ரன் சினிமாவில் அறிமுகமானபோது, முதலில் தான் ஒரு சினிமா பாடகி ஆகவேண்டும் என்ற கனவில் இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது முழுநேர நடிகை ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

அதை நினைவில் வைத்திருந்த பார்த்திபன், சரியான சமயம் பார்த்து, தற்பொழுது தனது படத்தின் பாடலொன்றை பாட வைத்துள்ளார்.

சிம்ரன் இப்பாடலை பல நாள் பயிற்சிக்குப் பின் நன்றாக பாடியிருக்கிறார்.

பின்னணி பாடும்  நடிகைககளின் வரிசையில் ஸ்ருதி ஹாசனுக்கு அடுத்து, சிம்ரனும் நட்சந்திரப் பாடகியாக இணைந்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீடுபோது, நடிகை சிம்ரனின் குரல் அவரைப் போலவே இனிமையாக இருக்குமா? இல்லையா? என்பதை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

0 comments

Post a Comment