பள்ளிக்கு சென்ற 3-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் தப்பிஓடினார்.
சிதம்பரம் சுப்பிரமணிய படையாச்சி தெருவைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி ஒருவர் புதுத்தெரு வழியாக வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சென்றுள்ளார்.
அப்போது புதுத்தெருவில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அச்சிறுமியிடம் துண்டு சீட்டை கொடுத்து விலாசம் எழுதிகொடு எனக்கூறி, அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடிக்கு அழைத்துச் சென்று படிக்கட்டில் அமரவைத்து, உடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் உள்ள பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் அந்த இளைஞரை பிடித்து, சிறுமியை காப்பாற்றியுள்ளார்.
அப்போது அவரது சட்டப்பையிலிருந்து செல்போன், பணம் ஆகியவை கீழே விழுந்ததால், அவ்ஊழியர் அதனை எடுக்க முயன்ற போது, அந்த இளைஞர் தப்பிஓடிவிட்டார்.
பின்னர் அச்சிறுமியை குடியிருப்பில் வசிப்பவர்கள் வேறு உடை கொடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து, அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
சிதம்பரம் சுப்பிரமணிய படையாச்சி தெருவைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி ஒருவர் புதுத்தெரு வழியாக வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சென்றுள்ளார்.
அப்போது புதுத்தெருவில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அச்சிறுமியிடம் துண்டு சீட்டை கொடுத்து விலாசம் எழுதிகொடு எனக்கூறி, அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடிக்கு அழைத்துச் சென்று படிக்கட்டில் அமரவைத்து, உடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் உள்ள பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் அந்த இளைஞரை பிடித்து, சிறுமியை காப்பாற்றியுள்ளார்.
அப்போது அவரது சட்டப்பையிலிருந்து செல்போன், பணம் ஆகியவை கீழே விழுந்ததால், அவ்ஊழியர் அதனை எடுக்க முயன்ற போது, அந்த இளைஞர் தப்பிஓடிவிட்டார்.
பின்னர் அச்சிறுமியை குடியிருப்பில் வசிப்பவர்கள் வேறு உடை கொடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து, அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
0 comments
Post a Comment