கோச்சடையான் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்துக்கும் தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
விரைவில் தன் அடுத்த படத்தைத் தொடங்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இந்தப் படத்தை அவருடைய நீண்ட கால நண்பரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கபடுகிறது.
1995இல் முத்து, 1999இல் படையப்பா என சூப்பர்ஸ்டாரை வைத்து இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த ரவிக்குமார் அதற்குப் பின் ஜக்குபாய் என்ற படத்தை ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தார்.
ஆனால் ரஜினி அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில்தான் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ராணா என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது.
ஆனால் படத்தின் பூஜை அன்றே ரஜினியின் உடல்நிலை மோசமடைந்ததால் அந்தப் படமும் கைவிடப்பட்டது.
இதுபோன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ரவிக்குமாரை காக்க வைத்துவிட்ட சூப்பர் ஸ்தார் இந்தமுறை அவரது இயக்கத்தில் எப்படியும் நடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் வெற்றிப்படமான படையப்பாவின் தொடர் பாகமாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அனுஷ்கா தற்போது குணசேகர், ராஜமௌளியின் பாகுபலி போன்ற படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த 1 ஒரு வருடமாக புதிய படங்கள் எதையும் அனுஷ்கா ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments
Post a Comment