Friday 7 March 2014

உண்மையிலேயே இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்துகொண்டாரா?

இன்டர்நெட் முழுவதும் பரபரப்பாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல் இது. இயக்குநர் சமுத்திர கனி தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்ற வதந்தி பரவி வருகிறது.

ஜெயம் ரவி, அமலா பால் நடிப்பில் உருவான ’ நிமிர்ந்து நில்’ படம் இன்றைய தினம் வெளியாகுவதாக இருந்தது.


ஆனால் நேற்று தயாரிப்பு குழுவினருக்குள் நடந்த சில பிரச்சனைகளால் மனமுடைந்த சமுத்திரக்கனி இன்று சில மணி நேரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என செய்திகள் பரவுகின்றது.

ஆனால் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, படம் நாளை வெளியாகிறது.  சமுத்திரக்கனி பூரண நலத்துடன் இருக்கிறார்.

உயிரோடு இருக்கும் பிரபலங்கள் இறந்துவிட்டார்.. தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று திடீரென வதந்திகளைப் பரப்பி ஊடகங்கள் பிரபலமடைவது புதிதல்ல.. ஏற்கனவே நடிகர் குமரி முத்து , நடிகை கனகா இறந்துவிட்டதாக புரளி கிளம்பியது நினைவிருக்கலாம்.

1 comments: