கடந்த 30 ஆண்டுகளாக தான் எழுதிய பல்லாயிரம் திரைப்பாடல்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, முப்பது ஆண்டு முத்துகள் என்ற தலைப்பில் சிடியாக வெளியிட்டுளளார் கவிஞர் வைரமுத்து.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது 200 பாடல்களைத் தந்துள்ளார். கூடவே, அந்த பாடல்கள் பிறந்த கதைகளை தன் சொந்த குரலிலேயே பதிவு செய்துள்ளார்.

இந்த சி.டி.யோடு அவர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், 'என் அன்புக்குரியவர் நீங்கள்; 200 பாடல்களையும் கேளுங்கள்: இரவின் மடியிலும், இளைப்பாறும் நொடியிலும், நீண்ட பயணத்தின் நெடுஞ்சாலைகளிலும் இந்தப் பாடல்கள் உங்களைத் தூங்கவிடாமல் தாலாட்டக் கூடும்.
இந்தப் பாடல்கள் ஒலிக்கும் போதெல்லாம் உங்களோடு நானிருப்பேன்; என்னோடிருங்கள் எப்போதும்; இசையும் தமிழுமாய் இணைந்து செல்வோம். இசையோடு தமிழிருந்தால் வேறென்ன வேண்டும்,' என்று கூறியுள்ளார்.
ஒரு தனியார் எப்எம்முக்காக அவர் நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்பே இந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments
Post a Comment