Saturday 17 May 2014

மகளுக்கு படிப்பு முக்கியமில்லை.. நடிப்புதான் முக்கியம் - நடிகை ராதா அதிரடி!

பிரபல நடிகை ராதாவின் மகள் நடித்த "யான்" படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தது.

முன்னதாக, இந்த விழாவில் கலந்து கொள்ள துளசியை யாரும் அழைக்கவில்லையாம். ஆனால், ஆடியோ வெளியிடுகிற சேதியறிந்த ராதா, உடனடியாக அப்பட தயாரிப்பாளரான எல்ரெட் குமாரை தொடர்பு கொண்டு, துளசியை எதற்காக அழைக்கவில்லை? என்று கேட்டாராம்.


அதற்கு, அவருக்கு பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சினிமா விழாவுக்கு அழைத்தால் படிப்பு கெட்டுப்போகுமே என்பதால் தான் அழைக்கவில்லை என்றாராம். அதைக்கேட்ட ராதாவோ, என்னைப் பொறுத்தவரை சினிமாவுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.

தொழிலை நாம் மதிக்க வேண்டும் அப்போது தான் தொழில் நம்மை மதிக்கும். அதனால், நான் துளசியுடன் கண்டிப்பாக ஆடியோ விழாவில் கலந்து கொள்வேன் என்று கூறி சென்னைக்கு வந்து யான் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.

yan-audio-release-medaiyil-nadigai-ratha-athiradiஅதையடுத்து நேற்று நடந்த அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டார் துளசி.

இதன் மூலம் படிப்பைவிட நடிப்புதான் முக்கியம் என்பதை தன் மகள் துளசிக்கு புரிய வைத்துள்ளார் ராதா.

படிப்பு என்பது அறிந்துகொள்வதற்காக மட்டுமே. நடிப்புதான் பிழைத்துக்கொள்ள வழிவகுக்கும் என்பதில் ராதா தெளிவாக இருக்கிறார். தன் மகளுக்கு வீட்டில் அவ்வப்பொழுது நடிப்பு சொல்லிக் கொடுப்பதாக கேள்வி. 

0 comments

Post a Comment